Saturday, May 8, 2010

ராவணன் - உசுரே போகுதே ( Usurae Poguthae Lyrics - Raavanan)

இசை: ஏ. ஆர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: கார்த்திக், முஹம்மது இர்பான்
இயக்கம்: மணிரத்னம்

இந்த பூமில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கரும் தேக்குமர காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா. தவிச்சு..
உசுரு தடம் கெட்டு திரியுதடி

தயிலான் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி..
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயகத்த தீத்துவச்சு மனிச்சுடுமா..

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த ஒலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சுரியன பார்த்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்தம் பந்தமோ போகல
பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

1 comment:

Anonymous said...

NICE LYRICS........ VAAZHGA TAMIL