Saturday, May 8, 2010

ராவணன் - உசுரே போகுதே ( Usurae Poguthae Lyrics - Raavanan)

இசை: ஏ. ஆர். ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: கார்த்திக், முஹம்மது இர்பான்
இயக்கம்: மணிரத்னம்

இந்த பூமில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கரும் தேக்குமர காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா. தவிச்சு..
உசுரு தடம் கெட்டு திரியுதடி

தயிலான் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி..
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயகத்த தீத்துவச்சு மனிச்சுடுமா..

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த ஒலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சுரியன பார்த்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்தம் பந்தமோ போகல
பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்தி கிடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன், மடிபிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணிக் குயிலே

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

Tuesday, March 24, 2009

PRODUCTION TERRORS





This photo contains all my class mates who attended the industrial visit to cochin.

சிறுவன் கற்றுத்தந்த பாடம்...

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு மின்சார இரயிலில் வந்துக் கொண்டிருந்தேன். என் அருகில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தந்தையும் அமர்த்திருந்தார். அப்போது சமோசா விற்பவர் அங்கே வந்தார். இரண்டு சிறுவர்களுக்கும் அந்த தந்தை சமோசா வாங்கித்தந்தார். அந்த சிறுவர்களில் மூத்தவன் அதனை சாப்பிட்டுவிட்டு சமோசாவுக்கு கொடுத்த தாளினை வெளியே எறியச் சென்றான். இதைப் பார்த்த அவன் தந்தை தாளினை நன்றாகச் சுற்றி எறியும்படிச் சொன்னார். அந்த சிறுவனோ எதற்கு இப்படிச் சொல்கிறிர்கள் என்று கேட்டான். உடனே அவனது தந்தை தாளினை இரயில் ஓடும்போது எறிந்தால் பின்னாலிருப்பவர்கள்மீதுப் பட்டுவிடும் என்று கூறினார். இதனை முழுவதும் கவனித்துக்கொண்டிருந்த அந்த இளையவன் அவன் அப்பாவிடம் சொன்னான் " அப்ப தாள் எல்லாத்தையும் குப்பத்தொடியில போடாம கீழேயேப் போடலாமா அப்பா..??". இதனைக் கேட்ட அவனது தந்தை என்னச் சொல்லுவது என்றுத் தெரியாமல் திக்கு முக்காடிவிட்டார். அவர் மட்டுமில்லை இதனைக் கவனித்த அனைவருமே சற்று அந்த சிறுவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்துத் திகைத்துவிட்டோம்.

ஆம் நண்பர்களே இனியாவது நாம் எந்த ஒருப்பொருளையும் ரோட்டிலோ அல்லது இரயில் பயணத்தின்போது வெளியேவோ போடாமல் குப்பைத்தொட்டியில் போடுவோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

Monday, March 23, 2009

மூடநம்பிக்கையின் உச்சம்

அன்று வகுப்பு முடிந்து வெளியே வந்து நானும் என் நம்பனும் பேசிக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு எதிரில் இருந்த பிள்ளையார் கோயிலில் ஒருவர் வேண்டிக்கொண்டு இருந்தார். அவர் வேண்டுதலை முடித்தவுடன் கையிலிருந்த வாழைப்பழத்தில் ஊதுபத்தி இரண்டை ஏற்றினார். பின்பு அந்த பழத்தினை கோயில் வாசல் முன் வைத்துவிட்டு திரும்பவும் கும்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கோயிலின் பக்கத்திலிருந்த ஆடு ஒன்று அந்த பழத்தைச் சாப்பிடச் சென்றது. அதைக் கண்ட அந்த நபர் பிள்ளையாருக்கு வைத்த பழத்தினை ஆடு சாப்பிடுகிறது என்ற கடுப்பில் அதனை அங்கிருந்து துரத்திவிட்டார். ஊதுபத்தி ஏற்றின அந்த பழத்தினை சாப்பிடும் போதே அந்த ஆட்டின் வாய் சுட்டுயிருக்கும் என்னும் வருத்தத்தில் நானும் என் நம்பனும் பேசிக்கொண்டு இருக்க இருக்க, அந்த நபரோ கடவுளுக்கு வைத்த பழத்தில் ஆடு வாய் வைத்ததில் தெய்வக் குற்றமாகிவிடுமோ என்றே புலம்பிக்கொன்டுச் சென்றார். பாவம் அந்த நபருக்கு தெரியவில்லை சக மனிதனுக்கும் மற்று உயிரினங்களுக்கும் உதவிச் செய்வதேக் கடவுளுக்குச் செய்யும் படையல் என்று..

கடுவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை அறவே அழிக்க வேண்டும்.

Finally IPL gets a bang...

IPL season-2 is not going to take place in India. This may be shocking news to cricket fans who really don’t know what this IPL is made for. In India sports blindly means cricket and other sports n games are not given importance. Cricket acclaimed such a high popularity after 1983 and after which the cricket has been a business place. After 1992 i.e. after signing globalization policy, all the multi-national companies started using cricket players to promote their products. This has made cricket players to earn lots of money outside the ground. Also because of this the BCCI (Board of Control for Cricket in India) started to earn lots of money. This made ex-players and politicians to aim at the BCCI post so that they can earn a lot. And from this everything in cricket has been made only to make money.
Coming to 20-20 matches, at first the BCCI argued that this form of cricket is not an exact way of cricket and this 20-20 would affect the skills of the test cricketers. Then seeing the 20-20 matches played in other nations and number of sponsors willing to donate for this form of cricket, BCCI accepted the 20-20 match format. Then came 20-20 first world cup which India won and this increased the popularity of the game again to a very high extent. Then Kapil Dev started the ICL saying it’s for players who are not considered for international cricket by BCCI because of many issues like caste and money. The BCCI felt if the ICL grows popular it would damage the image developed by the BCCI so far and thus they started the IPL. Because of limited money and sponsorships the ICL was not able to get popular among people but yet their players showed high class cricket in the ground.
Due to large number of sponsors and wealthy franchise owners, the IPL easily got into the minds of people by means of mere publicity which lagged in ICL. There was player auction and other business oriented approaches that were going in IPL. The Indian and other nation’s players were brought for high amounts by the franchise and in any IPL team there would be more number of international players (i.e. players who have already played international cricket may it be of Indian players or other nation’s players) and only little number of Indian players who did not get chance to show their class was included in the team. Thus the IPL did not help to give a platform to players who did not get chance rather it helped the BCCI to earn lots and lots of money.
IPL season-2 was scheduled during April knowing that the election would take place during the same period. With the elections on one hand how would the BCCI expect the government to give full security to other event like IPL? The election in India is taking place in 5 phases only to make sure that the security can be made tight. In such case how would be possible to allocate security personals to IPL.
In this regard the president of the BCCI has announced that IPL is shifting to some other country because of the government’s attitude. I feel government is very correct in its attitude since IPL is just a game which is not as important as elections are concerned. Some political leaders who want to politicize every issue are saying that government’s decision would show a wrong signal to other countries in regard of security of India.

Tuesday, March 10, 2009

நான் கண்ட ஒற்றுமை???

தீபாவளிக்கு முதல் நாள் அன்று தி நகரில் தூணி எடுக்க சென்றது தப்பு என்று தோன்றியது. நான் அவ்வளவு நெரிசலை இதுவரை பார்த்ததுக்கூட இல்லை. ஒரு வழியாக தூணி எடுத்துவிட்டு கூட்டம் நிறைந்த அந்தகடையை விட்டு வெளியே வருவதற்குள் என் சட்டை வேர்வையில் நனைந்துவிட்டது. உடனே தி நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன். கூட்ட நெரிசலில் நடப்பதற்குக்கூட இடமில்லை. ஒரு வழியாக உஸ்மான் தெரு முனையை அடைந்தேன். அந்த தெருவை கடக்க ஏற்கனவே ஒரு பத்து பேர் காத்துகொண்டு இருந்தனர். நான் சென்ற ஐந்து வினாடிகளில் தெருவை கடக்க நின்றுக்கொண்டு இருந்த கூடும் வெகுவாக கூடியது. இதை பார்த்த என் முன்னாள் இருந்த ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அவரை பின் தொடர்ந்து அங்கு இருந்த கூட்டம் அனைத்தும் நடந்தனர். அந்த சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் இறங்கி வந்து "பச்ச லைட் போட்டுருக்குல இப்ப ஏன் கிராஸ் பண்ணுரிங்க?" என்று கேட்டார். உடனே அந்த கூட்டத்தை வழி நடத்தி சென்றவர், " இத்தன பேர் போறம்ல.. அவ்வளவு பேற்றையும் இடிச்சுட்டு போக முடிஞ்சா போ..." என்றார். இதை கேட்ட அந்த பைக்காரர் சிரித்து கொண்டே "இதுலையாவது ஒற்றுமையா இருக்கிங்களே" என்றார். உடனே அந்த ஒற்றுமை விரும்பி "ஒற்றுமையா!! அதுனா ஒண்ணுமில்ல.. செத்தா நான் மட்டுமா சாகப்போறேன் கூட ரெண்டு பேராவது சாவன்ல அதான்.." என்றார் நக்கல் பார்வையுடன். அந்த பைக்காரர் பேசுவது அறியாமல் திகைத்துப்போய் நின்றார். நான் பச்சை விளக்கு எரியும் பொது சாலையை கடந்தற்கு வருந்தினேன்.